சரிவுடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள்; ரூபாயின் மதிப்பும் சரிவு

மும்பை,மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் குறியீடு 201.44 புள்ளிகள் சரிந்து 75,795.42 புள்ளிகளாக இருந்தது. நேற்று லாபத்துடன் தொடங்கிய நிலையில், இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது.இதன்படி, மும்பை பங்கு சந்தையில் டாடா ஸ்டீல், என்.டி.பி.சி., இன்டஸ்இன்ட் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.எனினும், டெக் மகிந்திரா, மாருதி, இன்போசிஸ், எச்.சி.எல். டெக் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் வர்த்தக தொடக்கத்தில் லாபத்துடன் காணப்பட்டன.இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 82.65 புள்ளிகள் சரிந்து 22,876.85 புள்ளிகளாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் சரிந்து ரூ.86.96 ஆக உள்ளது.ஆசியாவில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்கு சந்தைகளில் வர்த்தகம் லாபத்துடனேயே காணப்பட்டது.
மூலக்கதை
