'இந்தி படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற வேண்டும்' - ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி

  தினத்தந்தி
இந்தி படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற வேண்டும்  ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி

மும்பை, நேற்று மும்பையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் அருண்குமார், "தற்போது நடைபெறும் மொழி தொடர்பான சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானவை. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொழியை வளர்த்து, அந்த குறிப்பிட்ட மொழியில் அதன் வணிகத்தை நடத்த வேண்டும். இந்தியாவில் எந்த பிராந்திய மொழியும் இல்லை. அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள். நமக்கு ஒரு நிர்வாக அமைப்பு உள்ளது. நமக்கு ஒரு பொதுவான தேசிய மொழி தேவை. ஒருகட்டத்தில், அது சமஸ்கிருதம், ஆனால் இன்று அது சாத்தியமில்லை. எனவே இப்போது என்னவாக இருக்கமுடியும், அது இன்று இந்தியாக இருக்க முடியும். நீங்கள் இந்தியை விரும்பவில்லையென்றால், உங்களுக்கு ஒரு தேசிய மொழி இருக்கவேண்டும். ஆங்கிலம் பொதுவான தேசிய மொழியாக இருக்கமுடியாது. அது ஒரு வெளிநாட்டு மொழியாக இருக்கும்.ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் எம்.எஸ். கோல்வால்கரின் கூற்றுப்படி, ஆங்கிலம் ஒரு பொதுவான தேசிய மொழியாக மாற்றப்பட்டால், மாநில மொழிகளின் இருப்பு ஆபத்தில் இருக்கும். இந்தி படிப்படியாக ஒரு பொதுவான தேசிய மொழியாக முன்னேற வேண்டும். அந்த செயல்முறை இயற்கையாக இருக்கவேண்டும். சுயநல நோக்கங்களுக்காக இந்தி மொழியை எதிர்ப்பவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை.இந்தி மொழியை எதிர்க்கும் தமிழ்நாட்டில், லட்சக்கணக்கான மக்கள் இந்தி மொழியில் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்கிறார்கள். எனவே அந்த விஷயத்தில் கவலைப்பட தேவையில்லை" என்று அவர் கூறினார்.

மூலக்கதை