இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

மும்பை,அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 75க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர விரிவிதிப்பை அமல்படுத்துவதாக கடந்த 2 ஆம் தேதி அறிவித்தார். டிரம்ப் அறிவித்த மறுநாளில் ஆசிய, ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதற்கிடையே, பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்புக்கு பிறகு பங்குச்சந்தைகள் ஏற்றம் காணத்தொடங்கியுள்ளன. அந்த வகையில் பங்குச்சந்தையில் இன்றும் ஏற்றம் ஏற்பட்டது. இன்று காலை வர்த்தக தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 1061.26 புள்ளிகள் உயர்ந்து, 74,941.53 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 354.90 புள்ளிகள் உயர்ந்து 22,754.05 ஆக இருந்தது. சர்வதேச சந்தைகளில் பதற்றம் சற்றே தணிந்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகளின் ஏற்றம் ஏற்பட்டு இருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அதேநேரத்தில், மற்ற ஆசியப் பங்குச்சந்தைகள் சரிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
