தமிழகத்துக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

  தமிழ் முரசு
தமிழகத்துக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்துக்குக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரை இந்த எச்சரிக்கை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் அண்மையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 5 ஆம் தேதிவரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் இதையடுத்து மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னையில் அவ்வப்போது மழை பெய்துவரும் நிலையில் அடுத்த நான்கு நாள்களுக்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

மூலக்கதை