2024 பொதுத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவு! - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
2024 பொதுத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவு!  லங்காசிறி நியூஸ்

2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (11) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.  வேட்புமனுக்கள் தொடர்பான ஏதேனும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய 1.30 மணி வரை தேர்தல் ஆணையம் நேரம் ஒதுக்கியுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 349 சுயேச்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. அதன்படி நேற்றைய நிலவரப்படி 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், வேட்பாளர்களுக்கான செலவீன வரம்பு தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்களிலும் ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் ஊடாக பொதுத் தேர்தலை ஒருங்கிணைக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தல்துவா மேலும் தெரிவித்துள்ளார்.  

மூலக்கதை