மாயமான போக சக்தி அம்மன் சிலையை மீட்க கோரிக்கை

  தமிழ் முரசு
மாயமான போக சக்தி அம்மன் சிலையை மீட்க கோரிக்கை

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த போக சக்தி அம்மன் சிலையை ஏலம்விட இருப்பதாகவும் இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தி உள்ளார்.இவர் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாகப் பொறுப்பு வகித்தவர்.தஞ்சை மாவட்டம் தேவநாராயண பேட்டையில் உள்ளது சுகுந்த குந்தலாம்பிகை அம்மன் கோவில். இந்தக் கோவிலைச் சேர்ந்த போக சக்தி அம்மனின் பஞ்சலோகச்சிலை கடந்த 1974ஆம் ஆண்டு காணாமல் போனது என்றும் தற்போது அச்சிலையை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம்விட இருப்பதாகவும் பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.“கடந்த 14ஆம் தேதியன்று இந்த கோவிலில், பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 13 சிலைகள், தற்போது எங்கு உள்ளன என்பது தெரியவில்லை. கோவிலில் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்திய தொல்லியல் துறையினர் முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும். “மீட்கப்படும் அனைத்து சிலைகளையும் பாதுகாப்பு மையத்தில் வைக்காமல் சம்பந்தப்பட்ட கோவில்களிலேயே வைக்க வேண்டும், அமெரிக்காவில் ஏலம்விடப்போகும் சிலையை மீட்பது தொடர்பாக பிரதமர், மத்திய கலாசார துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார். பொன்.மாணிக்கவேல்.

மூலக்கதை