டெல்லியின் புதிய முதல்-மந்திரி யார்? முடிவு செய்வதில் நீடிக்கும் தாமதம்

  தினத்தந்தி
டெல்லியின் புதிய முதல்மந்திரி யார்? முடிவு செய்வதில் நீடிக்கும் தாமதம்

புதுடெல்லி,70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை தெரிவித்தன. அதன்படி பா.ஜனதா 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று இருக்கிறது. தேர்தலின்போது பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் யார்? என்று குறிப்பிடப்படவில்லை இருப்பினும் டெல்லி பொதுமக்கள் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் புதிய முதல்-மந்திரி யார்? என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.புதிய முதல்-மந்திரியாக முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜின் பெயர் ஏற்கனவே அடிபட்டு வந்தது. ஆனால் அவர் தற்போது மக்களவை உறுப்பினராக இருக்கிறார். இதைப்போல கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிரிதி இரானி பெயரும் பேசப்படுகிறது.இது தவிர புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மாவின் பெயரும் பேசப்படுகிறது.இவர்கள் போக டெல்லி பா.ஜனதா தலைவர் வீரேந்திர சத்சேபா மற்றும் மகளிர் அணி நிர்வாகி ரேகா குப்தா ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன. இவர்களுக்கு இடையே டெல்லி எம்.பி.யாக இருக்கும் மனோஜ் திவாரியின் பெயரையும் பரிசீலிக்கிறார்கள். இவர்களில் யாராவது ஒருவர்தான் டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி இறுதி முடிவு எடுப்பது பிரதமர் மோடியாகத்தான் இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இன்று முதல் மந்திரி யார்? என்பதை முடிவு செய்ய கட்சியின் சட்டமனறக்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டம் நாளைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் புதிய முதல்-மந்திரி யார்? என முடிவு செய்யப்பட்டு 20-ந்தேதி பதவி ஏற்பு விழா நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி முதல் மந்திரி பதவியை பிடிக்க முக்கிய தலைவர்கள் இடையே போட்டா போட்டி நிலவுவதால் பாஜக மேலிடம் முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மூலக்கதை