நெல்லை - திருச்செந்தூர் இடையே 6 ரெயில் நிலையங்களில் நடைமேடை உயர்த்தும் பணி தொடக்கம்

நெல்லை, நெல்லை - திருச்செந்தூர் இடையே முக்கியமாக 6 ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரெயில் நிலையங்களில் தாழ்வான நடைமேடையை உயர்த்தும் பணி ஏற்கனவே முன்மொழியப்பட்டு இருந்தது. இந்த பணியானது இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்படும் எனவும், தொடக்கமாக காயல்பட்டினம் ரெயில் நிலையத்தில் இருந்து நடைமேடை உயர்த்தப்படும் எனவும் தென்னக ரெயில்வேயின் பொறியாளர் பிரிவு சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி, நெல்லை -திருச்செந்தூர் மார்க்கத்தில் உள்ள ரெயில் நிலையங்களான பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, கச்சனாவிளை, குரும்பூர், காயல்பட்டினம் ஆகிய இடங்களில் தற்போதுள்ள தாழ்மட்ட நடைமேடை எண் -1ஐ உயர்மட்ட நடைமேடையாக உயர்த்தவும், செய்துங்கநல்லூர் நிலையத்தில் நடைமேடை எண் 1 மற்றும் 2-ஐ உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பின்படி இன்று (திங்கட்கிழமை) காயல்பட்டினம் ரெயில் நிலையத்தின் நடைமேடை உயர்த்தும் பணிக்காக எந்திரங்களை பயன்படுத்தி சமாளிப்பு பலகை மற்றும் சுவர் அகற்றும் பணி தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இந்த தகவலை தெற்கு ரெயில்வே பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
