சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் இவைதான் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

சென்னை, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்த விவாதங்களும் சமூகவலைதளத்தில் அதிகளவு நிலவி வருகின்றன.இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்த தனது கணிப்பினை இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார். அவரது கணிப்பின் படி, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று கணித்துள்ளார்.
மூலக்கதை
