உ.வே.சாமிநாதரின் செம்பணி நன்றியோடு போற்றப்படும்: மு.க.ஸ்டாலின்

  தினத்தந்தி
உ.வே.சாமிநாதரின் செம்பணி நன்றியோடு போற்றப்படும்: மு.க.ஸ்டாலின்

சென்னை,தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் 171-வது பிறந்தநாளையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் - பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த 'தமிழ்த்தாத்தா' உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாள் இன்று. மண்ணிலும் தீயிலும் மறைந்துபோகவிருந்த தமிழர் வரலாற்றுச் சுவடிகளைப் பதிப்பித்த அவரது செம்பணி தமிழுள்ளமட்டும் நன்றியோடு போற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை