குஜராத்தில் சிங்கம் தாக்கியதில் சிறுவன் பலி

  தினத்தந்தி
குஜராத்தில் சிங்கம் தாக்கியதில் சிறுவன் பலி

அம்ரேலி,குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பனியா கிராமத்தில் தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு சென்றபோது 7 வயது சிறுவனை சிங்கம் கடித்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். பின்னர் சிறுவனின் உடல் ஆற்றுக்கு அருகே மோசமாக நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தை தொடர்ந்து கிர் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள பகுதியில் சுற்றி திரிந்த 2 சிங்கங்களை பிடித்ததாக வனத்துறை துணை பாதுகாவலர் ஜெயந்த் படேல் தெரிவித்துள்ளார். பிடிப்பட்ட 2 சிங்கங்களும் கிரான்காச் விலங்கு பராமரிப்பு மையத்திற்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். சிங்கம் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை