சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி.. தொடர் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா

  தினத்தந்தி
சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி.. தொடர் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா

லாகூர், 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை சந்தித்தது.இதில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 165 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதனையடுத்து 352 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜோஷ் இங்லிஸ் 120 ரன்கள் அடித்தார். அவரே ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2009-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். கடந்த 2 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் (2013 மற்றும் 2017) ஒரு வெற்றி கூட பெறவில்லை. அந்த தொடர் சோகத்திற்கு நேற்றைய போட்டியின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மூலக்கதை