ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற மோகன் பகான்

  தினத்தந்தி
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற மோகன் பகான்

கொல்கத்தா, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோகன் பகான் அணி ஒடிசா எப்.சி. அணியை எதிர்கொண்டது.இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் இரு அணி வீரர்களுக்கும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த பாதியிலாவது கோல் அடிக்க வேண்டும் என இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சி செய்தனர். இதற்கு பலனாக ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் மோகன் பகான் அணி கோல் அடித்தது. தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி பெற்றது.

மூலக்கதை