இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்து பேசிய யாழ்ப்பாணம் எம்பி - லங்காசிறி நியூஸ்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் எம்பி சிவஞானம் ஸ்ரீதரன் சந்தித்து பேசியுள்ளார். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை தமிழரசுக் கட்சியை சேர்ந்த யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் சந்தித்து பேசியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் இலங்கை கடற்படையினரால் 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 38 மீனவர்கள் தண்டனை பெறப்பட்டு சிறையில் உள்ளனர். மேலும், 20 மீனவர்கள் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். இதனிடையே, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று இலங்கை மீனவர்களும் போராட்டம் செய்கின்றனர். இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் சந்தித்து பேசினார். பின்னர் பேட்டி அளித்த அவர், "விரைவில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், இப்பகுதியில் மீண்டும் மீன் பிடிக்க மாட்டோம் என்று கூறினர். குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டனர்" என்றார்.
மூலக்கதை
