அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கங்கள் வழங்கினார்

  தினத்தந்தி
அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கங்கள் வழங்கினார்

25-வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி 2024-2025 நிறைவு விழா இன்று மாலை 4 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியானது துப்பாக்கி சுடும் வீரர்களின் அசாத்திய திறமை மற்றும் அசாதாரண குறிபார்த்து சுடும் திறன்களை வெளிப்படுத்தியது. துப்பாக்கி சுடும் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர கடுமையாக போராடினர்.தமிழ்நாடு காவல்துறை அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியை மூன்றாவது முறையாக வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. 25-வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கம், கமாண்டோபள்ளி பயிற்சி வளாகத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 17-ந்தேதி முதல் நடத்தப்பட்டது.இந்த நிலையில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட நிறைவு விழாவில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதியநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ஒழுங்கு, ஒற்றுமை மற்றும் பெருமை ஆகியவற்றின் அடையாளமாக தோழமை உணர்வை வெளிப்படுத்தும் வகையில், இப்போட்டியில் பங்கேற்ற அணிகளின் அணிவகுப்பு மரியாதையை துணை முதல்-அமைச்சர் பெற்றுக்கொண்டார்.காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் சங்கள் ஜிவால், வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அகில இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாட்டுவாரிய பிரதிநிதி உரையாற்றினார். பின்பு போட்டியாளர்களுக்கு இடையேயான ஆரோக்கிமான போட்டி உணர்வையும், காவல்துறையின் நேர்த்தியான அணுகுமுறையையும் பாராட்டினார்.தமிழ்நாடு துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதக்கங்களும், பரிசு கோப்பைகளும் வழங்கினார். பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்ற வீரர்களின் விபரம் பின்வருமாறு:-ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை (சிறந்த அணி) அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையும், இரண்டாவது இடத்தை எல்லை பாதுகாப்பு படையும், மூன்றாவது இடத்தை அசாம் மாநில காவல்துறையும் பிடித்தனர்.பிஸ்டல் / ரிவால்வர் துப்பாக்கி சுடும் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை (சிறந்த அணி) மத்திய சேமக் காவல் படையும், இரண்டாவது இடத்தை அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையும், மூன்றாவது இடத்தை தமிழ்நாடு காவல்துறையும் பிடித்தனர்.கார்பைன் /ஸ்டென்கன் துப்பாக்கி சுடும் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை (சிறந்த அணி) இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையும், இரண்டாவது இடத்தை ஒடிசா மாநில காவல்துறையும், மூன்றாவது இடத்தை அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையும் பிடித்தனர்.அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையும், இரண்டாவது இடத்தை எல்லை பாதுகாப்பு படையும் பிடித்தனர்.மாநிலங்களுக்கிடையே ஒட்டு மொத்தமாக சிறப்பாக செயல்பட்ட அணியாக சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழ்நாடு காவல்துறையும், அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை ஒடிசா மாநில காவல் துறையும் பிடித்தனர்.பிஸ்டல் /ரிவால்வர் துப்பாக்கி சுடும் பிரிவில் சிறப்பு பாதுகாப்பு படை ஆய்வாளர் அமர் சிங் சிறந்த சுடுதலுக்கான (Best Shot) பரிசையும், கார்பைன் / ஸ்டென்கன் துப்பாக்கிசுடும் பிரிவில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை காவலர் விஷால் குமார் சிறந்த சுடுதலுக்கான (Best Shot) பரிசையும் வென்றனர்.பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, துணை முதல்-அமைச்சர் உதியநிதி ஸ்டாலினால் நினைவுப்பரிசு வெளியிடப்பட்டது. மேலும் 25-வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கிசுடுதல் போட்டி நிறைவு பெற்றதாக அறிவித்தார்.பின்னர், 25-வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி நிறைவு பெற்றதை முன்னிட்டு அகில இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரிய கொடியை சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவரிடம் ஒப்படைத்தார். தமிழ்நாடு பேண்ட் வாத்திய குழுவினரின் பேண்ட் வாத்திய நிகழ்ச்சியுடன் நிறைவு விழா முடிவுற்றது.

மூலக்கதை