ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு சந்தை

மும்பை,இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,087.39 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.50 மணியளவில், சென்செக்ஸ் 419.26 புள்ளிகள் அதிகரித்து 77,707.76 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 125.85 புள்ளிகள் உயர்ந்து 23,612.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த 7 நாட்களில் பங்குசந்தை ஏற்றத்தில் நிறைவடைந்த நிலையில் நேற்று மட்டும் சற்று சரிவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
