ஐ.பி.எல்.2025: பிளே ஆப் முன்னேறும் 4 அணிகள் இவைதான் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

மும்பை, இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதனால் 18-வது ஆண்டாக இந்த போட்டி வீறுநடை போடுகிறது. இதுவரை நடந்துள்ள 17 தொடர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.ரசிகர்களின் மிகுந்த வரவேற்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ள 4 அணிகள் குறித்த தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார். அவரது கணிப்பின் படி, "சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்" ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
