டிரம்பின் வரி விதிப்பு மிரட்டல் பற்றி பேசுங்கள்: மத்திய அரசுக்கு ப. சிதம்பரம் வேண்டுகோள்

புதுடெல்லி,அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு, ஏப்ரல் 2-ந்தேதி முதல் பல்வேறு நாடுகளுக்கு வரிகளை விதிக்கும் முடிவை எடுத்துள்ளது. இதுபற்றி மாநிலங்களவையில் முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் இன்று பேசும்போது, இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதமோ அல்லது எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ளவோ இல்லை என குறிப்பிட்டார்.வரிவிதிப்பு மற்றும் வர்த்தக போரால், ஏற்றுமதியில் பாதிப்பு, குறைந்த அந்திய நேரடி முதலீடு, பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் கரன்சி மதிப்பு குறைவு ஆகியவை ஏற்பட வழிவகுக்கும்.கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் கூட்டாக சேர்ந்து இதனை தடுக்கும் பணியில் இந்தியா ஈடுபட வேண்டும் என்றார். வரிவிதிப்பு போரால் வர்த்தக போர் ஏற்படும். இதனால், மொத்த உலகமும் துன்பத்திற்கு உள்ளாகும் என்றும் கூறினார்.2025-26 மத்திய பட்ஜெட்டில், டிரம்பின் அழுத்தத்தினாலேயே மோட்டார் வாகனங்கள், பயணிகளுக்கான கார்கள், சரக்குகள், போக்குவரத்து வாகனங்கள், சைக்கிள்கள் மற்றும் பொம்மைகளுக்கு கூட சுங்க வரியை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் குறைத்து அறிவித்திருக்கிறார் என்று சிதம்பரம் குற்றச்சாட்டாகவும் கூறினார்.இதனால், உலக பொருளாதாரம் பாதிக்கப்படும். வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களை அது அழித்து விடும் என்றும் கூறினார்.எனினும், இதற்கு பதிலளித்து பேசிய பா.ஜ.க. உறுப்பினரான குன்வர் ரத்தன்ஜீத் பிரதாப் நாராயண் சிங் பேசும்போது, வரிவதிப்பு அமலாகாத வரை, என்ன பேசுவது? அல்லது அதுபற்றி யார் என்ன குறிப்பிடுவது? என கேட்டார். ஏப்ரல் 2-ந்தேதி அமல்படுத்தப்பட்ட பின்னரே, அதுபற்றி நாம் பேச முடியும் என்றும் அவர் கூறினார்.
மூலக்கதை
