எழும்பூர் ரெயில் நிலைய தீ விபத்து குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம்

  தினத்தந்தி
எழும்பூர் ரெயில் நிலைய தீ விபத்து குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம்

சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெளியே காந்தி இர்வின் சாலைக்கு அருகில் நேற்று மதியம் 2.55 மணிக்கு சிறிய தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதியம் 3.10 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்து தொலைத்தொடர்பு கேபிளை மட்டுமே பாதித்தது. இந்த சம்பவத்தால் ரெயில் செயல்பாடுகள், தகவல் அமைப்புகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை