அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததால் முதல்-அமைச்சர் பதற்றத்தில் உள்ளார் - தமிழிசை சவுந்தரராஜன்

  தினத்தந்தி
அதிமுக பாஜக கூட்டணி அமைந்ததால் முதல்அமைச்சர் பதற்றத்தில் உள்ளார்  தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், "எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்!2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்! என்று கூறினார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-தமிழக மக்களின் அவுட் ஆம் கண்ட்ரால்-ஆக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அதிமுக- பாஜக கூட்டணி அமைந்த பிறகு முதலமைச்சராக ஸ்டாலின் பதற்றத்துடன் இருந்து வருகிறார். மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தபோது அவர்களுக்கு அடிபணிந்துதானே திமுக இருந்தது. ஊழலுக்கு ஒருமுறை, தேச விரோதத்திற்கு ஒருமுறை என இருமுறை கலைக்கப்பட்டது திமுக ஆட்சி.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை