ஐ.பி.எல்.: முதல் பந்திலேயே சிக்ஸ்.. சாதனை படைத்த ஜெய்ஸ்வால்

  தினத்தந்தி
ஐ.பி.எல்.: முதல் பந்திலேயே சிக்ஸ்.. சாதனை படைத்த ஜெய்ஸ்வால்

பெங்களூரு, ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 70 ரன்களும், படிக்கல் 50 ரன்களும் அடித்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.பின்னர் 206 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 194 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 49 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி இலக்கை நோக்கி களமிறங்கிய முதல் பந்திலேயே தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் சிக்சர் அடித்து அதிரடியாக தொடங்கினார். இப்படி அவர் முதல் பந்திலேயே சிக்சர் அடிப்பது இது 3-வது முறையாகும். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் jaiஅதிக முறை முதல் பந்திலேயே சிக்சர் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

மூலக்கதை