திருவாரூர்: டிரான்ஸ்பார்மரில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு

  தினத்தந்தி
திருவாரூர்: டிரான்ஸ்பார்மரில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தெற்கு தென்பரை பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (57 வயது). இவர், மன்னார்குடி மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி காளவாய்க்கரை அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மோகனசுந்தரம் அந்த பகுதிக்கு சென்று பழுது நீக்கம் செய்ய டிரான்ஸ்பார்மர் மீது ஏறி சரி செய்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக டிரான்ஸ்பார்மரில் இருந்து மோகனசுந்தரம் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மோகனசுந்தரம் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை