ஐ.பி.எல்: சென்னை-பஞ்சாப் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

  தினத்தந்தி
ஐ.பி.எல்: சென்னைபஞ்சாப் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 30-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. சேப்பாக்கத்தில் நடக்கும் 6-வது ஆட்டம் இதுவாகும். இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மூலக்கதை