ரஷியா-உக்ரைன் மோதலை நிறுத்த இந்தியாவால் உதவ முடியும் - இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி

  தினத்தந்தி
ரஷியாஉக்ரைன் மோதலை நிறுத்த இந்தியாவால் உதவ முடியும்  இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி

ரோம்,ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. இந்த நிலையில், ரஷியா-உக்ரைன் மோதலை நிறுத்த இந்தியாவால் உதவ முடியும் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். முன்னதாக இத்தாலிக்கு வருகை தந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மெலோனி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-"சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டால், குழப்பமும் நெருக்கடியும் உருவாகும். சர்வதேச சட்ட விதிகளை மீறுவது உலகமயமாக்கலுக்கு எதிரானது. இதன் காரணமாகவே, ரஷியா-உக்ரைன் இடையிலான மோதலை நிறுத்த இந்தியா, சீனா போன்ற நாடுகளால் உதவ முடியும் என்று நான் நினைக்கிறேன்."இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை