ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக டிராவிட் மீண்டும் நியமனம்

  தமிழ் முரசு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக டிராவிட் மீண்டும் நியமனம்

புதுடெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ராகுல் டிராவிட் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக டிராவிட் நியமனம் செய்யப்பட்டபோது அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விலகினார்.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பணிக்காலம் முடிவடைந்த நிலையில் அவர் அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) வெளியிட்டது.

மூலக்கதை