கர்நாடக பாஜக எம்எல்ஏ மீது சமூக ஆர்வலர் பாலியல் புகார்

  தினத்தந்தி
கர்நாடக பாஜக எம்எல்ஏ மீது சமூக ஆர்வலர் பாலியல் புகார்

பெங்களூரு,கர்நாடக மாநிலத்தின் முன்னாள் மந்திரியும், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வுமான முனிரத்னா மீது 40 வயதான சமூக ஆர்வலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளாதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.அந்த புகாரில் கடந்த 2020ம் ஆண்டு கக்கலிபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு தினியார் ரிசார்ட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். மேலும் புகாரின்படி, விஜய குமார், சுதாகரா, கிரண் குமார், லோஹித் கவுடா, மஞ்சுநாத் மற்றும் லோகி ஆகிய 6 பேருடன் சேர்ந்து முனிரத்னா தன்னை பல ஆண்டுகளாக அச்சுறுத்தும் வகையில் ஆட்சேபகரமான வீடியோக்களை பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் முனிரத்னா மீது பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஒரே வாரத்தில் முனிரத்னா மீது சுமத்தப்பட்டுள்ள 3வது புகார் இதுவாகும். முன்னதாக கார்ப்பரேட்டரை மிரட்டியதாகவும், சாதி ரீதியாக திட்டியதாகவும் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ முனிரத்னா தற்போது பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை