7 வயதுச் சிறுமியைச் சீரழித்த ஆடவருக்குத் தூக்கு; மந்திரவாதி அறிவுறுத்தியதாக பொய் வாக்குமூலம்

  தமிழ் முரசு
7 வயதுச் சிறுமியைச் சீரழித்த ஆடவருக்குத் தூக்கு; மந்திரவாதி அறிவுறுத்தியதாக பொய் வாக்குமூலம்

கோல்கத்தா: மந்திரவாதி அறிவுறுத்தியதன் பேரில் ஏழு வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய ஆடவருக்கு கோல்கத்தா போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.எரிவாயு உருளை விற்கும் முகவரான 33 வயதான அலோக் குமார் என்ற அந்த ஆடவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்குற்றத்தைப் புரிந்ததாக காவல்துறை தெரிவித்தது. நீதிமன்ற விசாரணையின்போது, நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த அலோக் குமாரின் மனைவியே அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தார். குற்றம் நடந்த 80 நாள்களுக்குள் கோல்கத்தா காவல்துறை அலோக் குமாருக்கு எதிராக 350 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. கைதுக்குப் பின் அளித்த வாக்குமூலத்தில், தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை நன்றாக இருக்க வேண்டுமானால், இவ்வாறு செய்ய வேண்டும் என மந்திரவாதி ஒருவர் தமக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார் அலோக் குமார். ஆனால், அவர் பொய் கூறியது பின்னர் நிரூபணமானது. சீரழிக்கப்பட்ட சிறுமி தலையில் காயங்கள் இருப்பதும், அவள் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதும் உடற்கூராய்வின்போது தெரிய வந்தது.மொத்தம் 45 பேர் அலோக் குமாருக்கு எதிராக சாட்சியம் அளித்தனர். “எனினும், அலோக் குமார் மனைவி அளித்த சாட்சியம்தான் மிக முக்கியமானது. யாரும் பிறழ் சாட்சியாக மாறவில்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷிப்நாத் அத்திகாரி தெரிவித்தார்.இதையடுத்து, அலோக் குமாருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

மூலக்கதை