சூர்யா கேஎல்சிசி கடைத்தொகுதியில் தீ: நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

  தமிழ் முரசு
சூர்யா கேஎல்சிசி கடைத்தொகுதியில் தீ: நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சூர்யா கேஎல்சிசி கடைத்தொகுதியில் செப்டம்பர் 29ஆம் தேதி இரவு தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.இரவு 8.10 மணி அளவில் கடைத்தொகுதியில் உள்ள எச்சரிக்கை மணி ஒலித்தது.அதையடுத்து, அங்கிருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.இரவு 8.12 மணிக்குச் சம்பவ இடத்தை அடைந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத்துறை தெரிவித்தது.“மூன்றாவது மாடியிலிருந்து கரும்புகை கிளம்பியதை அதிகாரிகள் கண்டனர். கடைத்தொகுதிக்குள் விரைந்து பார்த்தபோது அவசரகால படிக்கட்டுகளில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிக்குள் அட்டைப் பெட்டிகள் எரிந்துகொண்டிருந்தன,” என்று கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.இரவு 8.45 மணி அளவில் தீ அணைக்கப்பட்டதாகவும் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்தத் தீச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

மூலக்கதை