2024 பொதுத் தேர்தல்: தபால் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்களுக்கான காலம் நீடிப்பு! - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
2024 பொதுத் தேர்தல்: தபால் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்களுக்கான காலம் நீடிப்பு!  லங்காசிறி நியூஸ்

நேற்று (8) நள்ளிரவுடன் முடிவடையவிருந்த 2024 ஆம் ஆண்டுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.தபால் தாமதங்கள் மற்றும் பொதுமக்கள் ஆணைக்குழுவிடம் முன்வைத்த பல கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். மேலும், அக்டோபர் 09 மற்றும் 10ம் திகதிகளில் பூர்த்தி செய்யப்பட்ட தபால் ஓட்டு விண்ணப்பங்களை, சான்றளிக்கும் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைப்பதே சரியானது என்றும் தேர்தல் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.எந்த சூழ்நிலையிலும் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை